Sunday, August 18, 2013

கீழக்கரையில் புதியதோர் உதயம் 'A.M.S.பெட்ரோல் பங்க்' - திறப்பு விழாவில் கீழக்கரை முக்கியஸ்தர்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் முகம்மது சதக் அறக்கட்டளை நினைவு வளைவு அருகாமையில், 'A.M.S.பெட்ரோல் பங்க்' என்கிற பெயரில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் இந்தியன் ஆயிலின் புதிய  விற்பனையகம், இன்று (18.08.2013) மாலை 4.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனை கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த, சென்னை ராயல் குழுமத்தின் நிறுவனர். ஜனாப். K.T.M.H. அமீர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.   





இந்த நிகழ்ச்சிக்கு விற்பனையகத்தின் உரிமையாளர் ஜனாப். A.M.S.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் தலைமை ஏற்று இருந்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை மேலாளர். திரு.கார்த்திக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மதுரை முஹைதீன் ஆண்டவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர், தொழிலதிபர் ஜனாப். அப்துல் பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 




 
மேலும் இந்த திறப்பு விழா நிகழ்விற்கு இராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கீழக்கரை முக்கியஸ்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜனாப். அபூபக்கர் அலி அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

A.M.S.பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருடைய தொழில் செழிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

படங்கள் மற்றும் தகவல் : ரோட்டரியன். இஞ்சினியர். ஆசாத் ஹமீத் அவர்கள்

FACE BOOK COMMENTS : 

 Jamaludeen Jamal, Mohammed Idrees, Love Twins and 37 others like this.

No comments:

Post a Comment