Friday, September 27, 2013

கீழக்கரை அருகே தென்னந்தோப்பில் ஒரு புதிய அசைவ உணவகம் - K 2 பார்டர் கடை !

கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த சகோதரிகள் மரியம் மற்றும் பாத்திமா மர்சூக் ஆகியோர்கள் ஒன்றிணைந்து கீழக்கரை - ஏர்வாடி சாலையில் (முள்ளுவாடி) 'K 2 பார்டர் கடை' என்ற பெயரில் புதிய அசைவ உணவகம் ஒன்றினை துவங்கி உள்ளனர். கடந்த 15.09.2013 அன்று திறப்பு விழா கண்ட இந்த உணவகத்தின் சிறப்பம்சமாக, அசைவப் பிரியர்கள் மனம் மகிழும் முகமாக அனைத்து அசைவ உணவு வகைகளும் பரிமாறப்படுகிறது. இதனால் கீழக்கரை நகரில் இருந்து தினமும் நண்பர்கள் கூட்டம், அசைவ உணவு வகைகளை சுவைக்க அலை மோதுகிறது. 




தென்னை மரங்கள் சூழ, நடுவில் அமையப் பெற்றிருக்கும் இந்த உணவகத்தில் காற்றோட்டமாக அமர்ந்து, இயற்கை சூழலில் பசியாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, குளுமை தரும் ஓடுகள் பொருத்தப்பட்ட தனி அறைக்குள் குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிடும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இங்கு திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவு வகைகளும், கீழக்கரை நண்பர்களால் சுடச் சுட சுவைக்கப்படுகிறது. 




சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன் வகைகள், பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மதிய சைவ உணவு வகைகள், சூப் வகைகள், அரபியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகள், கபாப், பழ ரச வகைகள், மில்க் சேக் வகைகள், ஐஸ் கிரீம் வகைகள் உடனுக்குடன் கிடைக்கிறது. ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே சப்ளை செய்யும் வசதியும் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களுள்  ஒருவரான சகோதரி மரியம் அவர்கள் பிரபல ETA நிறுவன இயக்குனர் MD சலாஹுத்தீன் அவர்களின் மகளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீட்டிலிருந்தே உணவு வகைகளை ஆர்டர் செய்ய  : 9626080800

இவர்களுடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

3 comments:

  1. அல்லாஹ் அருள் புரிவானாக,,,,, ஆமீன்

    ReplyDelete
  2. Good Attempt !!!!!All the best By Mohamed Imran

    ReplyDelete
  3. Remaking trends from GCC but it will perfectly gain because the restraunt located on ECR highway. All the best to the investors.

    ReplyDelete