கீழக்கரையில் கல்விச் சேவைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு முன்னோடியாகத் திகழும், 'முஹம்மது சதக் அறக்கட்டளையின்' மற்றுமொரு மைல் கல்லாக, இராமநாதபுரத்தில் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, ஆற்றல் மிக்க எதிகால இளைய தலைமுறையினரை வார்த்தெடுக்கும் அறிவுப் பட்டறையாக திகழ்ந்து வருகிறது. இப்பள்ளி ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ளது.
முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளியின் காணொளி !
( வீடியோ காட்சி )
இது குறித்து இப்பள்ளியின் தாளாளர் ஜனாப். அல்ஹாஜ். S .M .முஹம்மது யூசுப் சாகிபு அவர்கள் கூறுகையில் "நம் பகுதியில் எதிர் காலத் தூண்களாகிய மாணவ மணிகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எங்கள் முதன்மைக் குறிக்கோள். ஆங்கிலோ இந்தியன் பேராசிரியர்களைக் கொண்டு 'ஸ்போக்கன் இங்க்லீஷ்' வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது நிச்சயமாகிறது.
கலை, விளையாட்டுகள், யோகா பயிற்சிகள், கராத்தே வகுப்புகள் போன்றவைகளும் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. கீழக்கரையிலிருந்து மாணவ, மாணவிகள் வருவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது. தற்போது அட்மிசன் நடைபெற்று வருகிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மிகவும் தங்கியே திகழும் நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், இது போன்ற அறிவுசார் முயற்சிகளின் ஆணி வேர்கள் மென் மேலும் கல்விப் பணிகளில் செழித்தோங்க எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மிகவும் தங்கியே திகழும் நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், இது போன்ற அறிவுசார் முயற்சிகளின் ஆணி வேர்கள் மென் மேலும் கல்விப் பணிகளில் செழித்தோங்க எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அட்மிசன் தொடர்புக்கு : 04567 232010 / 232013 (OR) 9841521250
keep it up
ReplyDelete