Tuesday, June 5, 2012

கீழக்கரையில் தொடர் மின்வெட்டை சமாளிக்க புதிய வரவாக 'கண்மணி பவர் டெக்' நிறுவனம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை சின்னக் கடைத் தெருவில்  (பழைய முத்தலிபு ஹாஜியார் அரிசி கடை இருந்த இடத்தில்) தெற்குத் தெருவைச் சேர்ந்த நண்பர். முஹம்மது ஜமீல் ஹுசைன் அவர்களால் 'கண்மணி பவர் டெக்' என்ற பெயரில் மின்சாரத்துக்கு மாற்றான தொழிலகம் திறக்கப்பட்டுள்ளது. இவர் கீழக்கரை கண்மணி ஹார்டுவேர்ஸ் சீனி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மது ஜமீல் ஹுசைன் அவர்கள் கூறும் போது "நம் கீழக்கரை நகரில் தொடர் மின் வெட்டிலிருந்து பாதுகாப்பு பெரும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, இந்த தொழிலை துவங்கி இருக்கிறோம். எங்களிடம் கிடைப்பது போன்ற வாரண்டியுடன் கூடிய பேட்டரி, இன்வெட்டர்களை  வாங்குவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, இராமநாதபுரம் அல்லது மதுரை தான் செல்ல வேண்டி இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.



தற்போது எங்களது தொழிலகத்தில் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேட்டரீஸ் மற்றும் இன்வெர்டர்கள்  விற்பனைக்கு வைத்திருக்கிறோம். குறிப்பாக, எங்களிடம் லுமினாஸ், மைக்ரோடெக், ABM  போன்ற தலை சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும். இது மட்டுமல்லாது அனைத்து வகையான வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளும் நியாயமான விலையில் கிடைக்கிறது.



மேலும் தங்கள் இல்லங்களுக்கே வந்து வயரிங் மற்றும் பேட்டரிகளை பொருத்துவது சம்பந்தமான அனைத்து சேவைகளும் சிறப்பாக செய்து தருகிறோம். பேட்டரிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சமயம், தொலைபேசியில் அழைத்தால், உடனுக்குடன்  தங்கள் வீடுகளுக்கே வந்து சரி செய்து தருகிறோம். அனைவரும் எங்கள் தொழிலகம் சிறக்க ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  முஹம்மது ஜமீல் ஹுசைன் 9444782310 / 9488736310

1 comment: