இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி கோப்பையை கைப்பற்றியது.
இது குறித்து கீழக்கரை மூர் விளையாட்டு கிளப்பின் நிர்வாகி ஹசனுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இராமநாதபுரம் காவல்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் வாலிபால் இறுதிப்போட்டியில் முகவை அணியை மூர் கிளப் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. அதே போல் கூடைப்பந்து போட்டியில் மூர் கிளப் இறுதி போட்டி வரை இடம் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற நமதூர் அணி வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
வெற்றி வாகை சூடி, கோப்பையை கைப்பற்றிய வாலிபால் அணி வீரர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
moore hasan good luck keep it up my friend
ReplyDelete